​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுபோதையில் 'ஏர் கன்' துப்பாக்கியைக் காட்டி கிராம மக்களை மிரட்டிய நபர்

Published : Mar 04, 2024 9:52 AM

மதுபோதையில் 'ஏர் கன்' துப்பாக்கியைக் காட்டி கிராம மக்களை மிரட்டிய நபர்

Mar 04, 2024 9:52 AM

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த பூக்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரதாப்குமார் என்பவர் நேற்றிரவு மது போதையில் கடைப்பகுதிக்கு கையில் துப்பாக்கியுடன் வந்து கிராம மக்களை மிரட்டியுள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் பிரதாப்பின் கையிலிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து பார்த்தபோது, அது விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் ஏர் கன் வகையைச் சார்ந்தது என்று தெரிய வந்தது.

பிரதாப்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.