​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடி சென்னை வருவதை அடுத்து பலப்படுத்தப்படும் பாதுகாப்பு..!

Published : Mar 03, 2024 7:20 PM

பிரதமர் மோடி சென்னை வருவதை அடுத்து பலப்படுத்தப்படும் பாதுகாப்பு..!

Mar 03, 2024 7:20 PM

சென்னை மற்றும் கல்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி திங்களன்று வர உள்ளதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளதால், அங்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக பிற்பகல் 3.30 மணியளவில் கல்பாக்கம் செல்லும் பிரதமர், அணு சக்தி துறையின் பாவினி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 500 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட வேக ஈனுலையின் பணிகளை பார்வையிடுகிறார்.

அணு உலையிலிருந்து உருவாகும் அணுக்கழிவுகளைக் குறைத்தல் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், தூய்மையான ஆற்றல் மூலத்தை வேக ஈனுலை வழங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.