​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேருக்கு எலும்பு முறிவு

Published : Mar 03, 2024 12:40 PM

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேருக்கு எலும்பு முறிவு

Mar 03, 2024 12:40 PM

இளைஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களை மாமல்லபுரத்தில் சேஸிங்கில் போலீஸார் துரத்திய போது தவறி விழுந்த 4 பேருக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

சென்னை திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த நிஷாந்த் கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வருபவர்கள் மாமல்லபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலில் போலீஸார் அங்குச் சென்றனர்.

போலீஸாரைக் கண்டதும் டூவீலரில் தப்பிச் சென்றவர்கள் சாலையில் கீழே விழுந்ததில் 4 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

ஏரியாவில் யார் பெரிய ஆள் என்ற தகராறில் கொலை நடந்ததாகவும் இதுதொடர்பாக அண்ணன், தம்பிகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.