​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மர்ம நபர்களால் பிரபல நடனக்கலைஞர் அமர்நாத் கோஷ் சுட்டுக் கொலை

Published : Mar 03, 2024 6:39 AM

மர்ம நபர்களால் பிரபல நடனக்கலைஞர் அமர்நாத் கோஷ் சுட்டுக் கொலை

Mar 03, 2024 6:39 AM

அமெரிக்காவில் வசித்து வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த இந்திய நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மிசோரி மாநிலத்தின் செயின்ட் லூயிஸ் பகுதியில் அவர் மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை சரமாரியாக சுட்டுக் கொன்று தப்பிச் சென்றனர்.

கொலைக்கான பின்னணியை கண்டுபிடிக்க உதவும்படி அமர்நாத் கோஷின் தோழியும் நடிகையுமான தேவோலீனா பட்டாச்சாரியா தூதரகம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.