​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரை கருப்புக் கொடி ஏற்ற முடிவு

Published : Feb 15, 2024 6:51 AM

10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரை கருப்புக் கொடி ஏற்ற முடிவு

Feb 15, 2024 6:51 AM

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்றுவரை சாலை வசதியே இல்லை என்று கூறும் மலைவாழ் கிராம மக்கள் நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே  32கிராமங்கள் உள்ளன. இதில் அரசனூர்; எலுந்தபட்டு ;தொம்பை போன்ற மலை பகுதியில் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சாலை வசதியே இல்லை. ரேசன் வாங்கவும் மருத்துவத்துக்கும் பல கிலோமீட்டர் தூரம்வரை நடந்து செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது.