​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.3 கோடிக்கு மேல் கடன்வாங்கி தாம் கடத்தப்பட்டதாக நாடகமாடிய பெண்ணை மீட்டு போலீசார் விசாரணை

Published : Feb 15, 2024 6:19 AM

ரூ.3 கோடிக்கு மேல் கடன்வாங்கி தாம் கடத்தப்பட்டதாக நாடகமாடிய பெண்ணை மீட்டு போலீசார் விசாரணை

Feb 15, 2024 6:19 AM

திருச்சி விஸ்வாஸ் நகர் அருகே 6 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு வாங்கிய கடனைத் திருப்பித் தராத சினிமா துணைநடிகரின் மனைவி மாலதியை, உமாராணி என்பவர் தமது வீட்டில் இரண்டு மாதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக புகார் வந்ததையடுத்து போலீசார் மாலதியை மீட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், உமாராணி உள்ளிட்ட 16 பேரிடம் மாலதி 3 கோடியே 33 லட்ச ரூபாயை குறைந்த வட்டிக்கு வாங்கி அந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு வெளியில் விட்டதும், கடத்தல் நாடகம் ஆடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.