போக்குவரத்து விதிகளை மீறுவோரை படம் பிடித்து எக்ஸ் தளத்தில் ரோடு ராஜா என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிடுமாறு போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்துத் துறை சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்த நீங்க ரோடு ராஜாவா? என்ற போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படத்தையும் Follow Traffic Rules என்ற காணொளியையும் வெளியிட்ட போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர், விதிமீறலை பதிவிடுவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய விக்னேஷ் சிவன், போலீஸ் குடும்பத்தில் பிறந்த தம்மை ஐ.பி.எஸ். ஆக்க வீட்டில் அனைவரும் விரும்பியதாக கூறினார். அது முடியாத நிலையில் இப்படியாவது காவல்துறையுடன் பயணிக்க விரும்பி வந்ததாக தெரிவித்தார்.