திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் சுமார் அரை மணி நேரம் ராட்சத ஆமை ஒன்று படுத்திருந்துவிட்டு கடலுக்குத் திரும்பிச் சென்றது.
ஆமை படுத்திருந்த இடத்தில் பக்தர்கள் சிலர் தோண்டிப் பார்த்த போது 99 முட்டைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த முட்டைகளை கைப்பற்றிய வனத்துறையினர் மணப்பாடு ஆமைக் குஞ்சுகள் பொரிப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.