​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தோனேசியாவில் பொதுத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெறுகிறது

Published : Feb 14, 2024 11:09 AM

இந்தோனேசியாவில் பொதுத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெறுகிறது

Feb 14, 2024 11:09 AM

இந்தோனேசியாவில் அதிபர் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தலைநகர் ஜகார்த்தாவில் பலத்த மழையிலும் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். நாடு முழுவதும் 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுமார் 20 ஆயிரம் பதவிகளுக்கு இரண்டு லட்சத்து 59 ஆயிரம் பேர் போட்டியிடுகின்றனர். அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் அவரது மனைவி இரியானா விடோடோ இருவரும் ஜார்த்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

அதிபர் பதவிக்குப் போட்டியிடும் அனீஸ் பஸ்வீடன், கஞ்சார் ப்ரனோவோ, பிரபோவோ சுபியாந்தோ ஆகியோரும் வாக்களித்தனர்.