​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடைபாதையில் படுத்து தூங்கிய நபர் கார் சக்கரத்தில் சிக்கி பலி.. காரை நிறுத்தாமல் சென்றவர் கைது..!

Published : Feb 13, 2024 4:33 PM

நடைபாதையில் படுத்து தூங்கிய நபர் கார் சக்கரத்தில் சிக்கி பலி.. காரை நிறுத்தாமல் சென்றவர் கைது..!

Feb 13, 2024 4:33 PM

சென்னை எழும்பூரில் நடைபாதையில் படுத்து தூங்கியவர் தலையில் காரை ஏற்றி உயிரிழப்பை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

தள்ளுவண்டி டிஃபன் கடையில் வேலை செய்து வந்த ராஜன் என்பவர் இரவு பிளாட்பாரத்தில் உறங்கிக்கொண்டிருந்தபோது, கார் ஒன்று அவரது தலையில் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. ராஜனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் ஓட்டுநரை பிடிக்க முயன்ற போது அவர் காரில் வேகமாகத் தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த ராஜன் சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்தார். காரை ஓட்டிச் சென்ற அபிஷேக் ஜெயின் என்பவரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். நண்பர்களுடன் உணவகத்துக்குச் செல்வதற்காக நடைபாதை மீது காரை நிறுத்த முயன்றபோது விபத்து நேரிட்டதாக அபிஷேக் ஜெயின் வாக்குமூலம் அளித்துள்ளார்.