​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு.. காதலனுடன் மது அருந்திவிட்டு, போதை காளான் சாப்பிட்டதாக தகவல்

Published : Feb 13, 2024 4:25 PM



போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு.. காதலனுடன் மது அருந்திவிட்டு, போதை காளான் சாப்பிட்டதாக தகவல்

Feb 13, 2024 4:25 PM

உதகையில் போதை காளான் சாப்பிட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.

பொறியியல் கல்லூரி மாணவரான ஆகாஷும், நர்சிங் கல்லூரி மாணவியான ரித்து ஏஞ்சலும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் யாரும் இல்லாததால், ரித்து ஏஞ்சலை ஆகாஷ் வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும் அங்கு மது அருந்திய இருவரும் ஆகாஷ் வாங்கி வந்திருந்த போதை காளான்களையும் சாப்பிட்டு விட்டு தூங்கியதாக சொல்லப்படுகிறது.

மறுநாள் மூச்சு பேச்சு இல்லாமல் ரித்து ஏஞ்சல் இருந்ததை அடுத்து ஆகாஷ் ஆம்புலன்சை வரவழைத்தார். அதில் இருந்த பணியாளர்கள் ரித்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆகாஷ் வீட்டில் இருந்த போதை காளான்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.