​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மூன்று மாத பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டதாக அளித்த புகாரில் திடீர் திருப்பம்... பெற்ற தாயே பார்த்த கொடூர வேலை..!

Published : Feb 13, 2024 4:13 PM

மூன்று மாத பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டதாக அளித்த புகாரில் திடீர் திருப்பம்... பெற்ற தாயே பார்த்த கொடூர வேலை..!

Feb 13, 2024 4:13 PM

சென்னை மதுரவாயலில் 3 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டதாக கூறப்பட்ட புகாரில் திடீர் திருப்பமாக, குழந்தையை அதன் தாயே சடலமாக எடுத்துச் சென்று குப்பையில் வீசிய சி.சி.டி.வி. காட்சியை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணையில், உடல் நலமின்றி குழந்தை இறந்ததால், சடலத்தை வீசியதாக அப்பெண் கூறியதாக தெரிகிறது. 2-ஆம் திருமணம் செய்துள்ள அப்பெண் தான் குழந்தையை கொன்று வீசினாரா என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து, சென்னையின் குப்பைகள் கொட்டப்படும் பெருங்குடி கிடங்குக்குச் சென்று குழந்தையின் உடலை போலீசார் தேடி வருகின்றனர்.