​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எந்தப் புதிய திட்டங்களும் இல்லாத ஊசிப்போன உணவு பண்டம் ஆளுநர் உரை - இபிஎஸ்

Published : Feb 12, 2024 6:23 PM

எந்தப் புதிய திட்டங்களும் இல்லாத ஊசிப்போன உணவு பண்டம் ஆளுநர் உரை - இபிஎஸ்

Feb 12, 2024 6:23 PM

எந்த வித புதிய மக்கள் நலத்திட்டங்களையும் அறிவிக்காமல் பசப்பு வாத வார்த்தைகளைக் கொண்டு தங்கள் முதுகை தாங்களே தட்டிக் கொள்ளும் வகையில் ஊசிப் போன உணவு பண்டம் போன்று ஆளுநர் உரை உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.....

சபாநாயகர் மரபுகளைப் பின்பற்றவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், குறிப்பாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்கும் விவகாரம் என்று சுட்டிக்காட்டினார். ஆளுநர் , சபாநாயகர் விவகாரம், அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே உள்ள பிரச்சனை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

அதிமுக அரசின் பல திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு கைவிடப்பட்டு உள்ளதாக குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, அம்மா மினி கிளினிக் , மடி கணினி திட்டத்தையும் இந்த அரசு கைவிட்டுள்ளதாக புகார் கூறினார்.