​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீர்காழி அருகே கரை ஒதுங்கிய உருளை வடிவிலான மர்மப்பொருள்

Published : Feb 12, 2024 3:19 PM

சீர்காழி அருகே கரை ஒதுங்கிய உருளை வடிவிலான மர்மப்பொருள்

Feb 12, 2024 3:19 PM

சீர்காழி அருகே உள்ள நாயக்கர் குப்பம் மீனவ கிராமத்தில் அபாயம், தொட வேண்டாம் என எழுதப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வடிவிலான மர்மப்பொருள் கரை ஒதுங்கியது.

ஒன்றரை அடி நீளமும், 6 அங்குல விட்டமும் கொண்ட அந்த உருளையில், போலீசாரிடம் தகவல் அளிக்குமாறும் எழுதப்பட்டிருந்தது. வானில் பல மீட்டர் உயரத்துக்கு வண்ணப்புகையை வெளியேற்றி அபாய சமிக்ஞை தெரிவிப்பதற்காக நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் எனக் கூறப்படும் அந்த மர்மப் பொருளை சுற்றி போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர்....