​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூலி உயர்வு கேட்டு நெசவுத் தொழிலாளர்கள் போராட்டத்தால் 20 கிராமங்களில் பணிகள் பாதிப்பு

Published : Feb 12, 2024 2:23 PM

கூலி உயர்வு கேட்டு நெசவுத் தொழிலாளர்கள் போராட்டத்தால் 20 கிராமங்களில் பணிகள் பாதிப்பு

Feb 12, 2024 2:23 PM

விலைவாசி உயர்விற்கு ஏற்ப ஒரு மீட்டர் துணி நெசவு செய்வதற்கான கூலியை 10 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் நெசவுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதம் ஒருமுறை கூலி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தால் பொதட்டூர்பேட்டை, காளிகாபுரம், அம்மையார்குப்பம், மத்தூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் நெசவுப் பணிகள் நடைபெறவில்லை.