​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹமாஸ் வசமிருந்து 2 பிணைய கைதிகளை இஸ்ரேல் ராணுவம் மீட்பு

Published : Feb 12, 2024 2:11 PM

ஹமாஸ் வசமிருந்து 2 பிணைய கைதிகளை இஸ்ரேல் ராணுவம் மீட்பு

Feb 12, 2024 2:11 PM

ஹமாஸ் வசமிருந்து 2 பிணைய கைதிகளை இஸ்ரேல் ராணுவம் மீட்டது. எகிப்து எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராஃபா நகரில் தற்போது 14 லட்சம் பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஐ.நா.வின் எதிர்ப்பை மீறி, இஸ்ரேல் ராணுவம் ராஃபா நகரம் மீது வான் தாக்குதல் நடத்தியபடி உள்ளே நுழையத் தொடங்கியது. இதில் 37 பேர் உயிரிழந்தனர்.

அங்கு சோதனை நடத்திய இஸ்ரேல் பாதுகாப்பு படை, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸால் கடத்தி செல்லப்பட்ட 2 முதியவர்களை மீட்டது. இருவரும் நலமுடன் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்தது.