​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி பதிவெண் கொண்ட காரில் வீச்சரிவாளைக் காட்டி கிராம மக்களை மிரட்டி தப்பியவர்களுக்கு போலீசார் வலை

Published : Feb 12, 2024 2:04 PM

போலி பதிவெண் கொண்ட காரில் வீச்சரிவாளைக் காட்டி கிராம மக்களை மிரட்டி தப்பியவர்களுக்கு போலீசார் வலை

Feb 12, 2024 2:04 PM

சிவகங்கை அருகே பாகனேரியில் மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் 5 பேர் கும்பல் ஓட்டிச் சென்ற காரை வீடு ஒன்றில் வாசலில் மோதி நிறுத்தியது.

சத்தம் கேட்டு அங்கு பொது மக்கள் திரண்டதால் காரை அப்படியே விட்டு விட்டு, வீச்சரிவாளைக் காட்டி மிரட்டி அவ்வழியாக வந்தவர்களின் இரு சக்கர வாகனங்களை பிடுங்கிக் கொண்டு தப்பி ஓடினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காரின் பதிவு எண் போலி என்பதை கண்டறிந்து, அதற்குள் இருந்த மூன்று செல்போன்கள், மோடம், வீச்சரிவாட்களை கைப்பற்றி தப்பியவர்களை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.