​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதிய விபத்தில் சிறுவன் காருடன் எரிந்து பலி

Published : Feb 12, 2024 7:21 AM

இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதிய விபத்தில் சிறுவன் காருடன் எரிந்து பலி

Feb 12, 2024 7:21 AM

நாகர்கோவில் அருகே மது போதையில் ஓட்டிச் செல்லப்பட்ட பொலிரோ கார் டிவிஎஸ் எக்ஸல் வாகனத்தின் மீது மோதி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற நிலையில், அஜார் என்ற 15 வயது சிறுவன் காருடன் எரிந்து கருகி பலியானார்.

காரை ஓட்டிச் சென்ற கோபி என்பவரைப் பிடித்து பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர். மது போதையில் இருந்த அந்த நபர், மனைவி, குழந்தைகளோடு காரை ஓட்டிச் சென்றது தெரியவந்தது.

சிறிது நேரத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கசிந்த பெட்ரோல் காரணமாக காரும் டிவிஎஸ் வாகனமும் தீப்பற்றி எரிந்தன. அவற்றுடன் சேர்ந்து உயிரிழந்த சிறுவனின் உடலும் எரிந்து கருகியது.