​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உரிய அனுமதி பெற்று அன்னதானம் வழங்க தடையில்லை: சேகர்பாபு

Published : Jan 22, 2024 3:04 PM

உரிய அனுமதி பெற்று அன்னதானம் வழங்க தடையில்லை: சேகர்பாபு

Jan 22, 2024 3:04 PM

முறையான அனுமதியோடு திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கவோ, எல்.இ.டி திரை அமைக்கவோ எந்த தடையும் விதிக்கவில்லை என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மேற்கு மாம்பலம் கோயிலில் சிவப்பு கம்பள வரவேற்புடன் தரிசன ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.