​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உத்தவ் தாக்கரேயைத் தொடர்ந்து காங்கிரசுடன் முரண்படும் மம்தா.... மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி?

Published : Jan 21, 2024 6:24 AM

உத்தவ் தாக்கரேயைத் தொடர்ந்து காங்கிரசுடன் முரண்படும் மம்தா.... மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி?

Jan 21, 2024 6:24 AM

மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இண்டியா கூட்டணியில் உரிய மரியாதை கிடைக்காவிட்டால் தமது கட்சி தனிப்பாதையில் செல்லும் என்று அவர் அறிவித்துள்ளார்.

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகளிடையை தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

மகாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரேயைத் தொடர்ந்து, மம்தாவும் காங்கிரசுடன் முரண்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

முர்ஷிதாபாத்தில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ரகசியமாக ஆலோசனை நடத்திய மம்தா பானர்ஜி தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.