​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் முறைகேட்டில் 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு

Published : Jan 20, 2024 11:44 AM

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் முறைகேட்டில் 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு

Jan 20, 2024 11:44 AM

தஞ்சாவூர் மாவட்டம், திருவள்ளியங்குடியில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து 3 மாதங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே உயிரிழந்த நபர்கள் மற்றும் விண்ணப்பிக்காதவர்களின் பெயர்களில் வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டு, தொடர்பில்லாதவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.