​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாப் பாடல்களை பார்த்த 2 வடகொரியா மாணவர்களுக்கு 12 ஆண்டுகள் கடு ஊழிய சிறை தண்டனை

Published : Jan 20, 2024 9:08 AM

பாப் பாடல்களை பார்த்த 2 வடகொரியா மாணவர்களுக்கு 12 ஆண்டுகள் கடு ஊழிய சிறை தண்டனை

Jan 20, 2024 9:08 AM


வடகொரியாவில், தென்கொரிய நாட்டு பாப் பாடல்களை பார்த்த பதின்பருவ சிறுவர்கள் 2 பேருக்கு 12 ஆண்டுகள் கடு ஊழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தென்கொரிய நாட்டு திரைப்படங்களையும், பாடல் வீடியோக்களையும் பார்ப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை வடகொரிய அரசு கடந்த 2020ஆம் ஆண்டு இயற்றியது.

இந்நிலையில், 3 மாதங்களாக தென்கொரிய நாட்டு பாடல் வீடியோக்களை பார்த்துவந்த குற்றச்சாட்டில் கைதான 2 பள்ளி மாணவர்களுக்கு, திறந்தவெளி திரையரங்கில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்னிலையில், 12 ஆண்டுகள் கடு ஊழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாட்டு மக்களை அச்சுறுத்துவதற்காக வடகொரிய அரசு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக அரசியல் நிபுனர்கள் விமர்சித்துள்ளனர்.