​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிரியா மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

Published : Jan 19, 2024 7:03 AM

சிரியா மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

Jan 19, 2024 7:03 AM

ஜோர்டான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிரியாவின் அர்மான் நகரம் மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் ஆதரவுடன் சிரியாவில் இயங்கிவரும் போராளி குழுக்கள், அண்டை நாடான ஜோர்டான் வழியாக அரபு நாடுகளுக்கு போதைப் பொருட்களையும், ஆயுதங்களையும் கடத்திவருகின்றன.

அவர்களுக்கும் ஜோர்டான் படைகளுக்கும் அன்மை காலமாக மோதல்கள் அதிகரித்ததால், கடத்தல் காரர்களை குறிவைத்து ஜோர்டான் ராணுவம் இந்த வான் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.