​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண்ணுக்கு வயிற்று வலியாம் எதாவது ஊசி போட்டு விடுங்க.. எகத்தாள மருத்துவரின் செயல்..! அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன ?

Published : Jan 13, 2024 6:23 AM



பெண்ணுக்கு வயிற்று வலியாம் எதாவது ஊசி போட்டு விடுங்க.. எகத்தாள மருத்துவரின் செயல்..! அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன ?

Jan 13, 2024 6:23 AM

ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வயிற்றுவலி சிகிச்சைக்காக சென்ற பெண்ணிடம் ஏதாவது ஊசி போட்டு விடுங்க என்று எகத்தாளமாக பேசியதாக கூறி, அரசு மருத்துவரிடம் பெண் நோயாளி வாக்குவாதம் செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வயிற்று வலி என்று வந்த பெண் நோயாளியிடம் ஏதாவது ஊசி போட்டு விடுங்க ... என்று எகத்தாளமாக பேசிய புகாருக்குள்ளான, ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன் இவர் தான்..!

மொகரம் என்ற பெண் வயிற்றுவலி காரணமாக சிகிச்சைக்காக , ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில் செவிலியர்கள் அந்த பெண்ணுக்கு ஊசி மருந்து செலுத்திய நிலையில் ஒரு மணி நேரமாகியும் வலி சரியாகவில்லை என்று கூறப்படுகின்றது. இது தொடர்பாக மருத்துவரிடம் கேட்ட போது அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறி உள்ளார்

இந்த கடையில் காய்கறி சரியில்லைன்னா, வேறு கடைக்கு போகவேண்டியது தானே என்று மருத்துவர் மரியாதை குறைவாக எகத்தாளமாக கூறியதால் ஆத்திரம் அடைந்த நோயாளி, மருத்துவரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

இது குறித்து விளக்கம் அளித்த மருத்துவர் கார்த்திகேயன், வயிற்றுவலி சரியாகவில்லை என்றதால் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு செல்லும் படி அறிவுறுத்தியதாகவும், அந்த பெண் தான் தன்னிடம் மரியாதை குறைவாக பேசி வாக்குவாதம் செய்ததாகவும் தெரிவித்தார்.