​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அட்டகாசம்... 180 காவலர்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்த சிறை கைதிகள்

Published : Jan 12, 2024 10:42 AM

ஈக்வடாரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அட்டகாசம்... 180 காவலர்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்த சிறை கைதிகள்

Jan 12, 2024 10:42 AM

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சுமார் 180 சிறை காவலர்களை, சிறை கைதிகள் பிணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

சிறை காவலர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு, தூக்கில் இடப்படுவதுபோல் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியானதால் அச்சமடைந்த உறவினர்கள் சிறைச்சாலைகளுக்கு வெளியே காத்துகிடக்கின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் மன்னன் அடால்ஃபோ மாசியஸ், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறையிலிருந்து தப்பித்ததை தொடர்ந்து, கடத்தல் கும்பல்கள் நாடு முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டன.

அவர்களின் கொட்டத்தை அடக்க அந்நாட்டு அரசு 2 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளது.