​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மணலில் மட்டும் ரூ.4,600 கோடி முறைகேடு: அண்ணாமலை

Published : Jan 12, 2024 6:10 AM

மணலில் மட்டும் ரூ.4,600 கோடி முறைகேடு: அண்ணாமலை

Jan 12, 2024 6:10 AM

தமிழகத்தில் மணலில் மட்டுமே 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அறிக்கை சமர்பித்துள்ளதாகவும், அதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஓசூர் பகுதியில் மட்டுமே முறைகேடு நடைபெற்றுள்ளதாக அண்ணாமலை கூறினார்.

என் மண், என் மக்கள் யாத்திரை 150-வது சட்டமன்ற தொகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றதைத் தொடர்ந்து பா.ஜ.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, இந்தியாவில் சுகாதாரம், பொருளாதாரம் என அனைத்திலும் தனிமனித மாற்றத்தை மோடி அரசு உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்.

எங்கு சென்றாலும் தமிழ் மொழியின் பெருமையை பிரதமர் மோடி பேசி வருகிறார் என தெரிவித்த அண்ணாமலை,

இந்தி புரியவில்லை என்றால் வெளியே போ என்று கூறும் நிலை தான் இண்டியா கூட்டணியில் உள்ளதாக அவர் விமர்சித்தார்.