​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈக்வடாரில் 22 போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை பயங்கரவாத அமைப்புகள் என்று அன்நாட்டு அரசு அறிவிப்பு

Published : Jan 11, 2024 5:07 PM

ஈக்வடாரில் 22 போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை பயங்கரவாத அமைப்புகள் என்று அன்நாட்டு அரசு அறிவிப்பு

Jan 11, 2024 5:07 PM

ஈக்வடாரில், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்ததால் அந்நாட்டு அரசு 22 கடத்தல் கும்பல்களை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து, அவர்களை அழித்துவிடுமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டது.

இவாரா மாகாணத்தில் பதுங்கியிருந்த லாஸ் லோபோஸ் கடத்தல் கும்பலின் தலைவனை, ராணுவத்தின் உதவியுடன் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அந்நாட்டில் உள்ள 5 சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த பல்வேறு கடத்தல் கும்பல்களைச் சேர்ந்த சிறை கைதிகள், 130 சிறை காவலர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்து, தங்களுக்கு எதிரான நடவடிக்கையை கைவிடுமாறு அரசுக்கு மிரட்டல் விடுத்துவருகின்றனர்.