​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இறால் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்: மத்திய அமைச்சர் எல்.முருகன்

Published : Jan 01, 2024 2:59 PM

இறால் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்: மத்திய அமைச்சர் எல்.முருகன்

Jan 01, 2024 2:59 PM

பிரதமர் மோடியின் முன்னெடுப்பால் இறால் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் எல். முருகன் கூறினார்.

மத்திய அரசு திட்டத்தை மீனவர்களிடம் எடுத்துரைக்கும் சாகர் பரிக்ரமா திட்டத்தின் 10-ம் கட்ட பயணத்தை சென்னை துறைமுகத்தில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புர்ஷோத்தம் ரூபாலா துவங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற எல். முருகன், நாடு விடுதலை பெற்ற நாளில் இருந்து 2014 வரைக்கும் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்ட மீன்வளத் துறைக்கு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 38 ஆயிரத்து 500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக கூறினார்.

எண்ணூர் எண்ணெய் கசிவு, அமோனியா வாயு கசிவு விவாகரங்கள் குறித்து தமிழக அரசின் அறிக்கையை பெற்ற பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.