​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய கட்டிடங்களில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் சீல் வைக்கப்படும் - அமைச்சர் முத்துச்சாமி எச்சரிக்கை

Published : Aug 31, 2023 7:45 PM

புதிய கட்டிடங்களில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் சீல் வைக்கப்படும் - அமைச்சர் முத்துச்சாமி எச்சரிக்கை

Aug 31, 2023 7:45 PM

அரசின் முன் அனுமதியின்றி கட்டப்படும் புதிய கட்டிடங்களில், விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனில் சீல் வைக்கப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி எச்சரித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 2016க்கு முன் அரசு அங்கீகாரம் பெறாத மனைப் பிரிவுகள் மற்றும் தனி மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், அத்தகைய மனைகளுக்கு அங்கீகாரம் பெற 6 மாத காலம் அவகாசம் தற்போது  வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.