​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்க கர்நாடக அரசை வலியுறுத்துவதற்கு முதலமைச்சர் ஏன் தயங்குகிறார்- எடப்பாடி பழனிசாமி கேள்வி

Published : Aug 30, 2023 3:03 PM

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்க கர்நாடக அரசை வலியுறுத்துவதற்கு முதலமைச்சர் ஏன் தயங்குகிறார்- எடப்பாடி பழனிசாமி கேள்வி

Aug 30, 2023 3:03 PM

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசை வலியுறுத்துவதற்கு முதலமைச்சர் ஏன் தயங்குகிறார்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தானும் டெல்டாகாரன் என்று கூறிய முதலமைச்சரின் வீரவசனம் கேட்பதற்கு நன்றாக இருந்த போதும், நெற்பயிர் கருகியதற்கு என்ன தீர்வு கண்டார் என்று வினவினார்.

காவிரி பிரச்சனையில் தமிழகத்தை காப்பாற்ற முடியாத முதலமைச்சர், இந்தியாவை எப்படி காப்பாற்ற முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அவரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காலில் விழுந்து வணங்கி வரவேற்றார்.