​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறுமிக்குப் பிறந்த ஆண் குழந்தை ரூ.8 லட்சத்திற்கு விற்பனை... 5 பேர் கைது மேலும் 4 பேருக்கு போலீசார் வலை.

Published : Aug 29, 2023 1:59 PM

சிறுமிக்குப் பிறந்த ஆண் குழந்தை ரூ.8 லட்சத்திற்கு விற்பனை... 5 பேர் கைது மேலும் 4 பேருக்கு போலீசார் வலை.

Aug 29, 2023 1:59 PM

மதுரை திருமங்கலம் அருகே சிறுமிக்குப் பிறந்த ஆண்குழந்தை விற்கப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரையூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தவறான உறவால் கர்ப்பமடைந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது சிறுமியும், அவரது தாயாரும் அங்கிருந்து யாரிடமும் கூறாமல் பேரையூர் வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேரையூர் கிராம செவிலியர் காந்திமதிக்கு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து குழந்தையின் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்ற காந்திமதிக்கு, குழந்தையை காட்ட மறுக்கவே, அவர் போலீசில் புகாரளித்துள்ளார்.

போலீசாரின் விசாரணையில், குழந்தை பெங்களூருவில் 8 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையை விலைக்கு வாங்கிய தேஜஸ்வரி உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார், இதில் தொடர்புடைய உசிலம்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் தாமரைச்செல்வன் மற்றும் செவிலியர் உள்பட 4 பேரைத் தேடி வருகின்றனர்.