​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்துகளில் பயணித்தவர்களிடம் மர்மநபர்கள் கைவரிசை... ஒரே நாளில் 4 பேர்களிடம் 25 சவரன் நகை கொள்ளை

Published : Aug 29, 2023 1:36 PM

பேருந்துகளில் பயணித்தவர்களிடம் மர்மநபர்கள் கைவரிசை... ஒரே நாளில் 4 பேர்களிடம் 25 சவரன் நகை கொள்ளை

Aug 29, 2023 1:36 PM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பேருந்துகளில் பயணித்த 4 பேர்களிடம் ஒரே நாளில் 25 சவரன் நகை திருடப்பட்டது .

பூதப்பாண்டி கடுக்கரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வீடு திரும்ப அண்ணாபேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ஏறி உள்ளார் ,அப்போது அருகில் இருந்த பெண் நகையை கழற்றி பையில் வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

இதைக்கேட்ட மாணவி 3 சவரன் நகையை பேக்கில் வைத்து பயணித்துள்ளார்.பின்னர் பேக் பிளேடால் கிழிக்கப்பட்டு இருந்ததை கண்டு பதறிபோன மாணவி. போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதே போல தென்தாமரைகுளத்தை சேர்ந்த பெண் ஒருவர் கோவில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் ராதாபுரம் தாலுகா திருமலாபுரம் சென்று விட்டு பின்னர் அண்ணா பேருந்து நிறுத்தம் வந்து ஊர்திரும்பியுள்ளார்.

வீட்டுக்கு சென்ற அவரது பையில் இருந்த 15 சவரன் நகை காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இதேபோன்று தேரேகால்புதூரில் இருந்து அண்ணா பேருந்து நிலையத்துக்கு வந்த 30 வயது பெண் ஒருவரின் 3 பவுன் நகையும், பீச்ரோடு தட்டான்விளையில் இருந்து அண்ணா பஸ் நிலையம் வந்த சத்துணவு பெண் ஊழியரிடம் 4 சவரன் தங்க நகையும் திருட்டு போயுள்ளது.