​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சி மாவட்டத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 18 பேரிடம் விசாரணை 34 குழந்தைகள் மீட்பு

Published : Aug 29, 2023 12:19 PM

திருச்சி மாவட்டத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 18 பேரிடம் விசாரணை 34 குழந்தைகள் மீட்பு

Aug 29, 2023 12:19 PM

திருச்சி மாவட்டத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்ததாக 18 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் அவர்களிடமிருந்து 34 குழந்தைகளை மீட்டனர்.

குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தொழிலாக பலர் செய்து வருவதாக தொடர் புகார்கள் வந்ததையடுத்து, ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவின்பேரில், 28 குழுக்கள் அமைக்கப்பட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சிக்னல்கள், கடைவீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

பெற்றோர் மட்டுமல்லாமல் பெற்றோர் அல்லாத சில பெண்களும் பிடிபட்ட நிலையில், அவர்கள் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுத்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.