​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை ரயில் பெட்டி தீ விபத்து தொடர்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது

Published : Aug 28, 2023 3:51 PM

மதுரை ரயில் பெட்டி தீ விபத்து தொடர்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது

Aug 28, 2023 3:51 PM

மதுரை ரயில்பெட்டி தீ விபத்து தொடர்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் பெட்டியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் ஆன்மீக சுற்றுலா வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி விசாரணை நடத்தி வந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 5 பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

5 பேரும் ரயில் பெட்டியில் விதிகளை மீறி சமைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்த நிறுவன ஊழியர்கள் 2 பேர் தீ விபத்தில் உயிரிழந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

உத்தரபிரதேசத்தில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் இரண்டு சிலிண்டர்கள், 5 அடுப்புகள், நிலக்கரி ஒரு மூட்டை, மண்ணெண்ணெயுடன் கூடிய ஸ்டவ் உள்ளிட்டவைகளை எடுத்து வந்ததுடன், கன்னியாகுமரியில் சட்ட விரோதமாக சிலிண்டர் ஒன்றையும் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

சிலிண்டரின் ரெகுலேட்டரில் கசிவு ஏற்பட்டு இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.