​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் பதற்ற நிலை - பாதுகாப்பு படைகள் குவிப்பு

Published : Aug 28, 2023 6:25 AM

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் பதற்ற நிலை - பாதுகாப்பு படைகள் குவிப்பு

Aug 28, 2023 6:25 AM

மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவானதையடுத்து அங்கு பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 

தலைநகர் இம்பாலில் சில வீடுகளுக்குத் தீவைத்து கொளுத்தப்பட்டதையடுத்து மீண்டும் அங்கு பதற்றம் நிலவியது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

தீவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரும் திரளாகக் கூடிய மக்களை கலைந்து போகச்செய்ய போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதனிடையே வேறொரு இடத்தில் வன்முறை கும்பல் காவல்துறையினரைத் தாக்கி துப்பாக்கிகளைப் பறித்துச் சென்றது. துப்பாக்கிகளை மீட்கவும் வன்முறையாளர்களைக் கைது செய்யவும் போலீசார் தனிப்படைகளை அமைத்துள்ளனர்.