​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நக்சல்களின் அச்சுறுத்தல்களை முறியடிக்க பாதுகாப்பு முகமைகள் தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்

Published : Aug 27, 2023 9:13 AM

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நக்சல்களின் அச்சுறுத்தல்களை முறியடிக்க பாதுகாப்பு முகமைகள் தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்

Aug 27, 2023 9:13 AM

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நக்சல்களின் அச்சுறுத்தல்களை முறியடிக்க பாதுகாப்பு முகமைகள் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நக்சல்கள் குறித்து நடத்திய ஆய்வில் மத்தியப் பிரதேசத்தில் பாலகாட் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவோயிஸ்டுகள் தங்களிடம் உள்ள நிதியை பயன்படுத்தி புதிய உறுப்பினர்களை தங்கள் அமைப்பில் சேர்ப்பதற்கும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்குவதற்கும் பயன்படுத்துவதாக உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.