​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹரியானாவில் வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட நூஹ் மாவட்டத்தில் மீண்டும் 144 தடை உத்தரவு..!

Published : Aug 27, 2023 6:23 AM

ஹரியானாவில் வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட நூஹ் மாவட்டத்தில் மீண்டும் 144 தடை உத்தரவு..!

Aug 27, 2023 6:23 AM

ஹரியானாவில் வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட நூஹ் மாவட்டத்தில் மீண்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் மதரீதியான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில், சர்வ் ஜாதிய இந்து மகாபஞ்சாயத் என்ற அமைப்பு நாளை மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், எந்தவொரு விரும்பத்தகாத சூழ்நிலையையும் தவிர்க்க நுஹ் மாவட்டத்தில் அனைத்து மொபைல் இணையம் மற்றும் மொத்த எஸ்எம்எஸ் சேவைகளை நிறுத்துவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை மகாபஞ்சாயத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ள கூடுதல் தலைமைச் செயலாளர், நூஹ் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.