​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை வியாசர்பாடியில் மின்சாரம் தாக்கி 9 மாத கர்ப்பிணிப் பெண் பரிதாப பலி

Published : Aug 26, 2023 5:50 PM

சென்னை வியாசர்பாடியில் மின்சாரம் தாக்கி 9 மாத கர்ப்பிணிப் பெண் பரிதாப பலி

Aug 26, 2023 5:50 PM

சென்னை வியாசர்பாடியில் மின் மோட்டாரிலிருந்து கசிந்த மின்சாரம் தாக்கி நிறை மாத கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

செங்குன்றத்தைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணியான இந்துமதி என்ற அந்த பெண் தலைப் பிரசவத்துக்காக தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இரவு 12 மணியளவில் கழிவறை சென்ற இந்துமதி, குழாயில் தண்ணீர் வரவில்லை என மோட்டாரை ஆன் செய்துள்ளார்.

அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வராததால், சந்தேகமடைந்த அவரது தாய் சென்று பார்த்தபோது, இந்துமதி இறந்து கிடந்துள்ளார்.

மின்மோட்டாரின் கீழ் பகுதியிலுள்ள வால்வு ஒன்றை திறக்க இந்துமதி முயன்றிருக்கலாம் என்றும் அப்போது மோட்டாரில் கசிந்த மின்சாரம் தாக்கி அவர் இறந்திருக்கலாம் என்றும் குடும்பத்தினர் கூறும் நிலையில், மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.