​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்... ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

Published : Aug 26, 2023 5:15 PM

வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்... ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

Aug 26, 2023 5:15 PM

வேளாண் சாகுபடி பரப்பு குறைந்து வரும் வட்டாரங்களில் சிறப்பு கவனம் செலுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் முதலைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். தென்னை மரங்களின் பரப்பை அதிகரிக்கவும், காய்கறி மற்றும் கனிகள் உற்பத்தி பெருக்கத்திற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஆட்சியர்களை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.