​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் வங்கி கலெக்சன் ஏஜென்டை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி விமல்குமார் கைது

Published : Aug 26, 2023 3:17 PM

சென்னையில் வங்கி கலெக்சன் ஏஜென்டை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி விமல்குமார் கைது

Aug 26, 2023 3:17 PM

சென்னை பாரிமுனையில்  வங்கி கலெக்சன் ஏஜென்டை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி விமல்குமார் கைது செய்யப்பட்டார்.

ரெப்கோ வங்கியின் ஒப்பந்த ஊழியரான நெற்குன்றத்தை சேர்ந்த கிரி கடந்த 23-ம் தேதி இரவு, வசூல் பணம் ஒரு லட்சத்து 87 ஆயிரத்துடன் பர்மா பஜார் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் அவரை இரும்பு ராடால் தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அங்கிருந்து பணத்துடன் தப்பிய கிரி வாகனத்தை கீழே போட்டுவிட்டு அருகில் இருந்த கடையில் தஞ்சம் அடைந்ததாக தெரிகிறது.

அவர் போலீசில் அளித்த புகாரின் பேரில் காசிமேட்டைச் சேர்ந்த ரவுடி விமல்குமாரை கைது செய்து பைக், கத்தி செல்போனை பறிமுதல் செய்தனர். 

தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.