​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் உரிய அனுமதியின்றி கட்டடம் கட்டி உள்ளதாக - அதிகாரிகள் தகவல்

Published : Aug 24, 2023 8:56 PM



கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் உரிய அனுமதியின்றி கட்டடம் கட்டி உள்ளதாக - அதிகாரிகள் தகவல்

Aug 24, 2023 8:56 PM

கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் உரிய அனுமதியின்றி கட்டடம் கட்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் கட்டி வரும் கட்டடத்திற்காக உரிய அனுமதியில்லாமல் கனரக வாகனங்களை பயன்படுத்தியதோடு, பொது பாதையில் சிமெண்ட் சாலை அமைத்ததாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.

இதேப்போன்று, நடிகர் பாபிசிம்ஹாவும் அரசு நிலத்தில் 3 மாடி கட்டடம் கட்டி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர், நில அளவை அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் இரண்டு நடிகர்களின் கட்டிடங்களையும் ஆய்வு செய்தனர்.

இரண்டு கட்டிடங்களுக்கும் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக வில்பட்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டிகுமார் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஆய்வறிக்கை கோட்டாட்சியரிடம் வழங்கப்படும் என தெரிவித்த அதிகாரிகள், நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபிசிம்ஹாவிற்கு நோட்டீஸ் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.