திருச்சி விமான நிலைய முகப்பிலிருந்து வாயில் வரை நடந்து சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், தன்னைக் காண வந்திருந்த தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கே.என். நேரு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்ய நாதன் உள்ளிட்டோரும் வரவேற்பளித்தனர்.