​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காரப்பாடி கிராமத்தில் புதிய கல்குவாரி அமைக்க எதிர்ப்பு...வெடிகளை பயன்படுத்தி பாறைகள் வெடிப்பதால் மக்கள் அச்சம்

Published : Aug 24, 2023 1:09 PM

காரப்பாடி கிராமத்தில் புதிய கல்குவாரி அமைக்க எதிர்ப்பு...வெடிகளை பயன்படுத்தி பாறைகள் வெடிப்பதால் மக்கள் அச்சம்

Aug 24, 2023 1:09 PM

ஈரோடு மாவட்டம் காரப்பாடி கிராமத்தில் உள்ள கல்குவாரியில் சக்திவாய்ந்த வெடிகளை வைத்து பாறைகள் உடைக்கப்படுவதால் அச்சமடைந்திருக்கும் கிராம மக்கள், புதிதாக மற்றொரு குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே உள்ள கல்குவாரியில் அரசு அனுமதித்த அளவை விட அதிக ஆழத்திற்கு பாறைகளை வெடிவைத்து எடுப்பதால் அதிர்வுகள் ஏற்பட்டு கிணறுகள் சேதமடைவதாகவும், கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் புதிய கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக கூறும் மக்கள், குவாரி அமைத்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.