​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரிஷிவந்தியம் அருகே கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி தேரோட்டம்... கற்பூரம் ஏற்றி, கும்மி அடித்து வழிபாடு நடத்திய திருநங்கைகள்

Published : Aug 24, 2023 11:45 AM

ரிஷிவந்தியம் அருகே கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி தேரோட்டம்... கற்பூரம் ஏற்றி, கும்மி அடித்து வழிபாடு நடத்திய திருநங்கைகள்

Aug 24, 2023 11:45 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மண்டகப்பாடி கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற சாமி ஊர்வலத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கூத்தாண்டவருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் திருநங்கைகள் தாலிக் கட்டிக் கொண்டு, கற்பூரம் ஏற்றி, கும்மி அடித்து வழிபாடு நடத்தினர்.

புதன்கிழமை மாலை நான்கு மணிக்கு தொடங்கிய சாமி ஊர்வலம், கிராமம் முழுவதும் இரண்டு முறை சுற்றிவந்து இரவு பத்து மணிக்கு நிறைவு பெற்றது.