​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடையநல்லூரில் வெறிநாய் கடித்ததில் இரு குழந்தைகள் படுகாயம்..!

Published : Aug 24, 2023 7:24 AM

கடையநல்லூரில் வெறிநாய் கடித்ததில் இரு குழந்தைகள் படுகாயம்..!

Aug 24, 2023 7:24 AM

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வெறிநாய் கடித்ததில் இரு குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

ரகுமானியாபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளை அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்  ஒன்று கடித்துக் குதறியதில் இரண்டு குழந்தைகளும் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் இரண்டு குழந்தைகளையும்  மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில்  ஒரு குழந்தைக்கு காயம் அதிகமாக இருந்ததால் அந்த குழந்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைகளை கடித்த வெறி நாய்களை உடனடியாக பிடித்து மாற்று இடத்தில் கொண்டு விட நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.