​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம்

Published : Aug 23, 2023 6:59 PM

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம்

Aug 23, 2023 6:59 PM

காவிரியில் தமிழகம் கேட்ட தண்ணீரை விட குறைந்த அளவு நீர் தான் வெளியேற்றுவதாகவும், நதி நீர் விவகாரத்தில் சமரசம் கிடையாது என்றும் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்குவதற்கு அம்மாநிலத்தில் விவசாயிகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய சித்தராமையா, காவிரி, மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சி குழு பிரதமர் மோடியை சந்தித்து மனு அளிக்கும் என்றார். முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் உரிமையை காக்க சட்டப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.