​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை காவல் ஆணையரிடம் ரவுடி பேபி சூர்யா சிக்கந்தர் மீது புகார்

Published : Aug 23, 2023 9:27 AM

மதுரை காவல் ஆணையரிடம் ரவுடி பேபி சூர்யா சிக்கந்தர் மீது புகார்

Aug 23, 2023 9:27 AM

கோவை பெண் யூடியூபர் ஒருவர் தனக்கு ரவுடிபேபி சூர்யா சிக்கந்தர் கொலை மிரட்டல் விடுப்பதாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோவை யூடியூபர் சித்ரா, தாம் யூடியூப் சேனல் நடத்தி வருவதாகவும், அதோடு குழந்தைகளுக்காக சேவை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

யூடியூப் மூலம் ரவுடி பேபிசூர்யா, சிக்கந்தர், சாதனா ஆகியோர் போடுகிற வீடியோ குழந்தைகளை மிகவும் பாதிக்கிறது என்று கூறிய அவர், இதனைக் கண்டித்தால் தம்மை அவர்கள் மிரட்டுகின்றனர் என்றும் புகார் கூறினார்.

யூடியூப் சேனல் வழியாக கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறிய சித்ரா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.