​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக மருமகள் புகார்.. மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ., சதாசிவம், அவரது மனைவி, மகன் மீது வழக்குப்பதிவு.. !!

Published : Aug 22, 2023 7:12 PM

வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக மருமகள் புகார்.. மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ., சதாசிவம், அவரது மனைவி, மகன் மீது வழக்குப்பதிவு.. !!

Aug 22, 2023 7:12 PM

மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவத்தின் மருமகள் அளித்த புகாரின் அடிப்படையில் சதாசிவம், அவரது மனைவி மற்றும் மகன் மீது சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சதாசிவத்தின் மகன் சங்கருக்கும் மனோலியா என்ற பெண்ணுக்கும் 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில், மனோலியா அளித்த புகாரில் திருமணத்தின் போது 200 சவரன் தங்க நகைகள், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் வழங்கப்பட்டதாகவும், மேலும் வரதட்சணை கேட்டு தகாத வார்த்தைகள் பேசி கொடுமைப்படுத்தி, குழந்தையுடன் தன்னை வீட்டை விட்டு விரட்டியதாக தெரிவித்துள்ளார்.

கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு வழக்குகள் பதியப்பட்ட நிலையில், குடும்பத்துடன் தலைமறைவானதாக கூறப்பட்ட சதாசிவம், காவல் நிலையத்திற்கு வந்து சம்மன் பெற்று சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளரை சந்தித்த எம்எல்ஏ சதாசிவம், தனது மருமகள் கூறிய குற்றச்சாட்டுகள் நூறு சதவீதம் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்துள்ளார்.