​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டு பட்டாசு போட்டு கல்லூரி மாணவர்கள் மோதல்.. மாணவர்களை கைது செய்து அழைத்துச் செல்லும் பொழுது கண்ணீர் விட்டு அழுத பெற்றோர்..

Published : Aug 22, 2023 5:29 PM

நாட்டு பட்டாசு போட்டு கல்லூரி மாணவர்கள் மோதல்.. மாணவர்களை கைது செய்து அழைத்துச் செல்லும் பொழுது கண்ணீர் விட்டு அழுத பெற்றோர்..

Aug 22, 2023 5:29 PM

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மாணவர்கள் மோதல் தொடர்பான வழக்கில் 9 மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்ற போது பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர்.

மேலும் மோதல் தொடர்பான வழக்கில் சட்டவிரோதமாக கூடுதல், ஆயுதங்களுடன் கூடுதல் உள்ளிட்ட மேலும் 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருதரப்பினர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்பட்டது. எனினும், அது நாட்டு பட்டாசு தான் என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதல் தொடர்பாக 9 பேரை கைது செய்த போலீஸார் அவர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்ற போது பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதனர்.

மோதல் தொடர்பாக, 18 மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று கல்லூரிக்கு வந்த மற்ற மாணவர்களின் அடையாள அட்டை மற்றும் உடைமைகளை போலீஸார் சோதனை செய்த பிறகே அனுமதித்தனர். காவல்துறையினர் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.