​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரும்புக் கடையில் தனது சக ஊழியரை கொலை செய்த நபர்... விலையுயர்ந்த பொருட்களை திருடி விற்றதை கண்டித்ததால் ஆத்திரம்

Published : Aug 21, 2023 6:19 PM

இரும்புக் கடையில் தனது சக ஊழியரை கொலை செய்த நபர்... விலையுயர்ந்த பொருட்களை திருடி விற்றதை கண்டித்ததால் ஆத்திரம்

Aug 21, 2023 6:19 PM

கோவை பெரிய நாயக்கன்பாளையத்தில் தனது திருட்டுத் தனத்தை கண்டித்த சக ஊழியரை அரிவாளால் வெட்டிக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

ரவி என்பவர் ஓட்டுநராகவும் செல்வராஜ் என்பவர் ஊழியராகவும் பழைய இரும்புக் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர்.

கடைக்கு வரும் விலையுயர்ந்த பொருட்களை உரிமையாளருக்குத் தெரியாமல் விற்றுவிடுவது செல்வராஜின் வாடிக்கை என்று கூறப்படும் நிலையில், அதனை ரவி கண்டித்து வந்துள்ளார்.

மேலும் உரிமையாளரிடம் சொல்லிவிடுவதாகவும் அவர் மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் வழக்கம்போல் கடைக்குச் சென்ற ரவி திரும்பி வராததால், அவரது மகன் சென்று பார்த்தபோது கடைக்குப் பின்பக்கம் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

விசாரணையில் செல்வராஜ், ரவியை கொலை செய்தது தெரியவந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.